ஞாயிறு, 28 நவம்பர், 2010

இன்பமான தவிப்பு...






இரு விழி படபடக்க..
இமையிரண்டும் சிறகடிக்க..
இருதயம் லப்டப்லப்டப் தாளமிட
இனி என்ன எழுத என இருகரங்கள் தடுமாற...

இனியவனே...
இது என்ன வேடிக்கை விளையாட்டு..!!
இனி ஒரு காலம் வருமாகில்..
இங்கிதம் தெரிந்து செயல்பட மாட்டேனா..?

இயம்பு நீயும்..
இணங்கல் தெரிந்து செயல்பட மறுப்பேனா....?
இலச்சை எனக்கிது உண்டென்று நீ உணர்ந்திட்டாலும்..
இவள் உன்பேர் வசித்திட்டாள் என்பதை காண்பாயா..?

இலையுதிர் காலங்கள் மரங்களுக்கு வரலாம்...
இவள் உன் நினைவில் வரலாமோ...?
இறக்கை ஒன்றிரண்டு இருந்திட்டால்...
இன்நேரம் இதை எழுதி கழித்திடுவாளா...?

இரு சிறகுகளும்..மின்சாரக் கம்பியில்..
இறுக்கிப் பிடித்திடும்..
இன்னல் நிலை நீ கண்டிட்டு..
இனிமையாக ரசித்தாய் நீ சிரிதாய்..இன்பமான என் தவிப்பை..
:)



இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இயம்பு ( இயம்புதல் ) - இனிமையாகக் கூறுதல்
இணங்கல் - உடன்பாடு; பொருந்துதல்
இலச்சை - நாணம்; வெட்கம்

ஓ என் நெஞ்சமே...



வெட்ட வெட்டத் தலைக்கும்..
வாழை மரம் போல...
நீ வெறுக்க வெறுக்க..
உன் மேல் என் அன்பு ...
வளர்கின்றதே....

மண் கேட்டு மழை வருவதில்லை...
நீ கேட்டு நான்
பாசம் வைப்பதில்லை...

தொட்டுச் செல்லும் காற்றைப்போல...
உன்னைத் தொட்டுச் செல்லுகின்றது என் நினைவு...

பட்டுத் தெறிக்கும் ஆதவனைப்போல்.....
என் நினைவு உன்னில் மட்டுமே...
பட்டுத் தெறிக்கின்றது.....

சித்திரை மாத வெய்யிலைப்போல்..
என்னை சுட்டெரிக்க வேண்டாமே..

மார்கழி மாத பனி போல்..
குளிர் காலத்து நிலவு போல்...
உயிரோடு உலாவரும் உறவு போல்.....
அந்தியில் மணக்கும் மல்லிகையாய் நானிருப்பேன்.

எல்லாமே என் அம்மா.



தொடரும் நினைவுகள்

ஆயிரம் கரங்கள் கொண்டு
அலைகடலைத் தடுத்தாலும்...
அலைகள் ஓயப்போவதில்லை..

ஆயிரம் உறவுகள்
அன்போடு பழகினாலும்..
உன் நினைவெனும் அலைகள்
என்னுள் ஓயப்போவதில்லை..

நலமுடன்..


பூக்களைப் பார்த்து
புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்..
ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும்..
அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே...

நதிகளைப் பார்த்து..
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்..
போய்ச் சேருமிடம் தெரியாமல்..
ஓடிக்கொண்டே கடலில் சங்கமிக்கின்றதே..

பசுமை நினைவுகள்

pic21.jpg

எத்தனையோ ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்..
சின்ன வயசில நீயூம் நானும்..
ஓடித்திரிந்த நாட்கள்..
பேசித்திரிந்த காலங்கள்..
கூடியாடி கழித்த நினைவுகள்..
என்றும் மறையாது...
என்றதை நீயும் அறிவாயா..?

ஆடையில் ஆசை.....

1.gif

ஆடைகள் நூறு வகை...
அதை ஆளும் வகை - அது
ஆளாளுக்கு சிறந்த கதை..

மேடை தனில் ஒரு வகை...
மேலோர் கீழோர் தாங்கி
வரும் வேறொரு நிலை..

மங்களத்திற்கு ஒரு வகை..
மயான அமைதிக்கு ஒரு வகை..

கட்சிக்கு ஒரு வகை....அது
காட்டும் பொருளில் இருள் ஒளி வேறு நிலை..

பாவலருக்கு ஒரு நிலை..
பள்ளிச் சிறுவர்களுக்கு வேறொரு நிலை..

நாடு விட்டு நாடு போனால்..
நாமும் தேடும் அந்த உடை..

கூடு விட்டு ஆவி போனால்..
கூடி நிற்போர் காட்டும்....கருப்பு வெள்ளை..
அது தரும் மன நிலை..

போதி மரத்து புத்தரும்..
போதனை தரும் வள்ளரும்..
போர்த்திருக்கும் காவி தனை..
ஆடவரும் மங்கையரும்....
ஆடையதுவே என்றே தேந்தெடுத்தயாடையது.....


பாலுக்கு ஒரு ஆடை...
பாலகனுக்கும் ஒரு ஆடை...
நீதிக்கு ஒரு ஆடை...
நீதி தேவனுக்கு ஒரு ஆடை...

காவலுக்கு ஒரு ஆடை..
தாதிக்கு ஒரு ஆடை..

வைத்தியனுக்கு ஒரு ஆடை..
வையகத்திற்கு ஒரு ஆடை..

எத்தனை ஆடை வந்திடினும்..
அத்தனையும் அதன் வெளித் தோற்றமே..

வெள்ளாடையெனும்...
கலங்கமில்லா உள்ளாடை நீ நெஞ்சத்தில்
கொண்டிருந்தால்..

அழுக்குள்ள ஆடையிலும்..
தூய்மை அங்கே வெளுத்து நிற்கும்.
அதுவே நீ கொண்டிருக்கும்
சிறந்த ஆடையென்பேன்.

வெளித்தோற்றத்தைக் கண்டு நம்பி விடாதே..
வெள்ளையுள்ளம் எங்கே என தேடிச்சென்று...
உள்ளே அகம் கண்டு கொள்வாய் நன்றே.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஜீவ காருண்யம்.



என்னை சாய்த்து
தன்னை வளர்த்து - ஈற்றில்
மண்ணில் நீக்க
என்னில் ஏற்றுவதேனோ..

உன்னை நீ அறிந்திடின்
என்னையும் நீ அறிந்திடுவாய்..
மண்ணை சரண் அடைந்திடின்- என்
கண்ணையும் நீ துடைப்பாய்..

மண்ணோடு நீ உக்கினால்..
மரமாவது வாழும்- என்னை
மண்ணாக்கினால் மனிதா
மண்கூடச் சோரும்.

வாசல் தேடி வரும் வசந்தம்..



Posted Image



நீண்ட தொலைவில்
நீயிருந்து அழகாக பேனா பிடித்து..
நீ நினைப்பதை எழுதி..

அருகில் இருந்து அணைப்பது
போல் இடையிடையே
அன்பாக பல பாடல்கள்..சேர்த்து..

பக்கம் பக்கமாக கண்ணீருடன்..
பாசக் கதைகள் பல பேசி..வரும்
அன்பு மடலை..

சட்டைப் பைக்குள்..
இஷ்டம் போல் கொண்டு திரிவேன்..
இரவுப் பொழுதிலும் விடிய விடிய
திரும்பத் திரும்ப படித்துக்கொண்டு இருப்பேன்..

கையிலெடுத்து முத்தம் பலகொடுப்பேன்..
நெஞ்சோடு அணைத்திருந்து..
கண்ணில் நீர் வழிய..
நீ அனுப்பும் மறு மடலுக்காக காத்திருப்பேன்..

பளிங்கு போல் உன் கையினால்..
மெழுகு போல் வார்த்தைகளை சேர்த்து..
உருகி உருகி முத்து முத்தாக
எழுதும் எழுத்துக்களே என் நினைவில்
இன்றும் என்றும் நிலையாய் இனிக்கிறது.

விதம் விதமான
கையடக்க செல்பேசி
பல நுட்பத்திறன் கொண்ட கணனி

இத்தனையிலும் நாளாந்தம் வரும்..
அன்பு மடல்கள்
என்றும் இனித்ததில்லை எனக்கு.

கலைவாணி அருள் தருவாயே..




Posted Image


கலைகளுக்கெல்லாம்
அதிபதியாக விளங்கிடும்..
அருள்மிகு தேவி சரஸ்வதிதாயே
நாமகள் உன்னையே நாவாறப் பாடவந்தேனே..


நான்கற்றதன் கல்வியறிவை..
நற்றமிழில் சொற்கொண்டு
நாமகள் உனக்கோர்..துதியொன்றை
சுவை பட தர வரம் தருவாயே..

சபை நடுவே
சரஸ்வதி துதியாற்ற..
வாழ்த்திப் பாராட்டி
வழியமைத்துவிடு கலைவாணிதாயே..

வெண்ணிற ஆடையில்..
வெண்டாமரை அமர்வில்..
கண்ணிரு மணியில்..
விண்தாரகைகள் ஒளியில்..

அருகில் அன்னமும்
முன்னங்கைகளிலே வீணையும்..
பின்னிரு கரங்களில் ஓலைச்சுவடியும்...ஜெபமலையும்..
கொண்டதோர் கோலமும்..கொண்ட நாயகியே..

ஆய கலைகள் அறுபத்தினாங்கிற்கும்..
ஆதி பராஷக்திகொண்ட..
அகிலமெல்லாம் போற்றும் ஆகமச் செல்வி தாயே..
அருள் மிகு ஞானசரஸ்வதி நீயே..

கல்லாதார் இவ்வுலகில்
இல்லாதிருக்க
எல்லாச் செல்வங்களும்..
அளித்திட வா கலைமகளே..

கள்ளமில்லா உள்ளம் பெறும் கல்வியை
எல்லையில்லா வானம் போல்..பரந்து
ஏழை எளியவர்க்கும் எடுத்துச் செல்ல
எழுத்தாற்றலை எல்லோருக்கும் அருளிப்பாயா தேவி..

மயில் வாகனத்தை உனதாக்கிக்கொண்டு...
மக்களெல்லாம் உணரும் வகையில்..
மயிலிறகு போல் கல்வியறிவை விரித்து..
மறுபடியும் இறகை மடிக்கும் அடக்கத்தை உணர்த்திய மாதேவி நீயே..

ஆடையிலும், அன்னத்திலும் காட்டியருளிய
அப்பழுக்கற்ற தூய்மை
அனைவரும் கடைப்பிடிக்க
ஆசிகள் வழங்கி அரவணைப்பாய் தாயே.

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.


(மொன்றியல் துர்க்கா பதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறவிருக்கும் வாணிவிழாவிற்காக எழுதிக்கொடுத்திருந்தேன்.)

உன்னிடம்


Posted ImagePosted Image
Posted Image


சில நிமிட உரையாடல்..
சில நிமிட எழுத்துக்கள்....
சில நிமிட வாழ்த்துக்கள்..
சில நிமிட பதிவுப்பார்வைகள்..
சில நிமிட கலந்தாலோசனைகள்..

இத்தனையிலும்
பல நாள் சிநேகம் போல்..
என்னை ஏன் உனக்குப்பிடித்திருக்கிறது..?

தொலை தூரத்தில் நீயிருந்தும்..
விரல் தொட்டு எழுதும் எழுத்துக்களுக்கு
தூரம் அதிகமில்லை என்பதாலா..?

யாரிடம் நான் கேட்பது..?
உன்னிடமே கேட்கிறேன்...
உள்ளதைச் சொல்லிவிடு..

சர்வதேச தமிழ் வானொலியின் வசந்த விழா 2010.



Posted Image

ன்புள்ளங்களின் இதயங்களின் ஈரம்..
றிவிப்பாளர்களை கண்டே மனமகிழும்..

யிரம் கண்கள் ஒன்றாகக் காணச்செய்யும்..
டலுடன் பாடல்களும் அரங்கேறச்செய்யும்..

துவரை ஏங்கிய நாட்களின் தாகம் தீரும்..
னிமையான முத்தமிழ் கானங்கள் காதில் வந்தேன்பாயும்..

ரொன்பதாண்டுகள் நிறைவின் காற்றலை கீதங்கள் கதை பல சொல்லும்..
ழம் தமிழா் நெஞ்சங்கொண்ட ஏக்கமிடரும் சற்றே ஆறும்..

லகெங்கும் அலையலையாய் வலம் வரும்..
ண்மை அன்பை என்றும் அது தரும்..

மை நெஞ்சின் ஓசைகளையும் வாங்கிக்கொள்ளும்..
ர் மக்களுக்காய் தன் சேவையை நலனே செய்யும்..

த்தனை இடர்கள் நம்மைச் சுற்றிவந்தபோதிலும்..
ட்டுத்திக்கும் நல்மருந்தாய் நமக்கின்பம் தந்திடும்..

ணி கொண்டு நாம் ஏறாத போதும்...
லம் கொண்ட வாசனையாய் எம்மை உயர உயர பறக்கச்செய்யும்..

யம் எம்மை விட்டுப்போக்கும்..
ப்பசியில் ஒன்றாய் ஐக்கியமாக்கும்..

வ்வொரு மனங்களிலும் ஏக்கம் தீர்ந்துகொள்ளும்..
ருமனப்பாடாய் காற்றலை கதைகள் பேசச்செய்யும்..

ங்கித் தமிழர் குரல் எழுப்பி அரங்கம் நிறையச் செய்யும்..
யாமை இன்பத் தமிழ் வானொலி தரும் சுவை அறியச்செய்யும்..

ஒளவியம்(பொறாமை) அகற்றி நல்லறிவை வளர்க்கச்செய்யும்..
ஒளடதம்(மருந்து) போல் வாழ்நாளில் வந்தெம்மை ஆற்றும்..அது வசந்த விழாவில் நிறைவேறும்..

நன்றியுடன் தனிமதி..Posted Image

(வருகின்ற ஐப்பசி 2 ல் நடைபெறவிருக்கும் ஐ.டி.ஆர் வானொலியின் வசந்தவிழாவிற்காக எழுதியிருந்தேன்.)

நீ வரும் திசை நோக்கி..




ஊரெல்லாம் தூங்கையிலே
உறவெல்லாம் கூடிக் குதூகழிக்கையிலே...
நாளெல்லாம் வரும் அருந்ததி நட்சத்திரம் போல்..
நான் மட்டும் உன் நினைவில் விழித்திருந்து
மகிழ்வேதுமில்லாமல், தூக்கமும் இல்லாமல்..
பசி துறந்து, எனை மறந்து பார்த்திருக்கின்றேன்..
நீ வரும் திசை நோக்கி.

பெண்ணாகப் பிறந்தது பாவமே..





என் அம்மா தாயே
ஏனம்மா என்னை
பெண்ணாய் பெற்றாய்..

மகளாய் நானுக்குப் பிறந்தாலும்...
பிறர் வீட்டு மருமகளாய்
ஏன் அனுப்பிவைத்தாய்..?

தட்டானிடம் கொடுத்து...
தங்கத்தால் அணிகலன்செய்து..
தட்டிக்கவி பாடி..
தங்கமே அங்கு நீ
தங்குமிடமே என்றனுப்பிவைத்தாய்..

வந்த நாள் சில நாளில்..
வகுமைக்கு ஏது குறைச்சல்..
வயிரவமின்றி வாழ்க்கை சென்றதம்மா..

பொட்டு வைத்த பூ முகத்தை
தொட்டுப்பார்த்து ரசித்த என் கணவர்..
கட்டுக்கதைகள் சொல்லுவதை நீயறிவாயோ..

தங்கநகை அணியாமல்..
தவறியும் இருக்கவிடமாட்டாமலிருந்த
என் கணவர்
தரித்திரம் பிடிச்சவளுக்கு தங்க நகை
உனக்கொரு கேடா என்கிறாரேயம்மா..

அள்ளி முடித்த கூந்தலோடு இருந்தாலும்..
அழகாய் தலையிழுத்து பூவும் பொட்டும் வைத்து
வா என்ற என் கணவர்..
யாருக்காகவடி இந்த அலங்காரம் எல்லாம் என
யாவரும் பார்க்க யாமசரிதன் போல் சொல்லுகிறாரம்மா..

அடுக்கடுக்காய் நீ தந்த சேலைகள் எல்லாம்..
அலுமாரியில் வைத்தே அழகு பார்க்கிறேனம்மா..
அவர் முன்னிலையில் நான் அழகற்றுப் போனேனம்மா..

பால் காரன் வந்தாலும்..
தபால் காரன் வந்தாலும்..
நான் தலை காட்டக்கூடாதாமம்மா..

நோய் வந்து படுத்தாலும்..
நொட்டைச் சொல் சொல்லி..
கட்டையால் அடிக்கிறாரம்மா..

பெற்றவர்கள் மானம் காக்க..
பெரும்பாலும் பொறுத்துக்கொண்டே வாழ்வேனம்மா..
பெண்ணாய்ப் பிறந்தது பாவமம்மா..

சுமைகள்...





விடுமுறையில் சென்று..
திரும்பி வரும்..என்னை
வாசல் வரை வரவேற்க
பல உறவுகள் காத்திருக்க..

சுமந்து வந்த பொதிகளை..
வாங்கிக் கொண்டு...
என் சுமை குறைந்ததாக..
எண்ணிக் கொள்ளும்..
சுற்றத்தாருக்கும்...

எங்கே புரியப்போகின்றது..
நான் சுமந்து கொண்டு
இருப்பது மறக்கமுடியாத
உன் நினைவுகளை
என் இதயச்சுமைகளாக..

கண்ணீரின் பயணம்.


Posted Image

வழியும் கண்ணீர்
என் விழியைப்பார்த்து(க்) கேட்டது...

எதற்காக என்னை
மண்ணில் விழச்செய்கிறாய் (என்று.)

எண்ணிலடங்கா சோகம்
என்னை வாட்டும் போது..
என்னையறியுமறியாமல்..
என் விழிகள் உன்னை அனுப்பிவைக்கின்றனவே...

ஓ......விழியே..
கண்ணீரின் நிலையைப்பார்...
நிலைத்தது எதுவுமில்லை..
வரும் துன்பம்
கரைந்தோடி...
நீர் நிறைந்தோடி...
நிலையில்லா வாழ்வில்..
மண்ணோடு நீராகி
மறுபடியும் மண்ணில் காணாத
கண்ணீர் மறைந்த மாயத்தைப் பார்...
வரும் துன்பங்களை..
கண்ணீர் போல் துரத்திவிடு...
கவலைகளை துடைத்துவிடு..
காலம் உனக்காக காத்திருக்கிறது..
கண்ணீருக்கு விடை கொடு..

மனமுடைந்த போது...
மனதாறுதலாக கண்ணீரின்
கதை தந்து
சிதைந்த என்னுள்ளத்தை..
சிறப்பாக வாழ வழிதந்தாய்..
ஓ......கண்ணீரே..
விழியிரண்டும் ஒளிபெறட்டும்
வலியிருக்கும் வாழ்வில் வழிபிறக்கட்டும்.

ஆத்ம திருப்தி..

Posted Image
----------------------------------------------------------------------------------------------------------------------

கடந்து வந்த 30 நாட்களில்..
காலை மாலை
கடவுள் வணக்கத்தைத்தவிர
வேறெந்த சிந்தனையுமில்லை..

பாலிருக்கும், பழமிருக்கும்..
பல வகையான உணவுகள் இருக்கும்..
பசிக்கு சாப்பிட்டதில்லை..

விதம்விதமான பாணங்கள்..
விருப்பம் போல் பருகக் கிடைக்கும்..ஆனால்..
விரும்பியும் குடித்ததுமில்லை..

தாகம் வந்து
தலையைச்சுற்றினாலும்..
தவறிக்கூட எச்சிலும் விழுங்கியதில்லை..


அலங்காரமாக ஆடையணிந்து
ஆடம்பரமாக வாழ்வமைத்து வாழ..
அதிகம் பேசி நாளைக் கழித்ததுமில்லை..


எல்லா வசதியிருந்தும்..
அல்லாவை நினைத்து
இல்லாத ஏழைகளுக்கு
இனிதே தானம் வழங்கி..
எல்லாக் குறைகளையும்..
மன்னித்து மகிழ்வோடிருக்கும் நோன்பு..

இருப்பதைக்கொடுத்து..
இல்லாததைப் பெற்று...
இருளகற்றி..ஒளிபெற்று
இன்பமுடன் வாழ வழியமைக்கும் திருநாள்..

இறை பார்க்க..
மறை சொன்ன
பிறை பார்த்து..
கறை நீங்க
கடைப்பிக்கும் நோன்பு..

ஒரு சொல் சொல்லாயோ



கடந்த கால எண்ணங்கள்
என்னைக் கடந்து போகின்ற
ஒவ்வாரு நிமிடத்திலும்..

ஓயாது கரையைத் தீண்டும்..
தொடர் அலையாய்..
விடாது தொடர்ந்து வருகிறது
உன் உருவம்..

ஒரு பக்கம் சுற்றும்
காத்தாடி போல்
அன்று என் நினைவில்
உனக்காகக் காத்திருந்தேன்..
நீ வரவில்லை..

இன்று..

உதிர்ந்து விழுகின்ற
பூக்களைப் போல்..
சிதைந்து அழுகின்றது..என் நெஞ்சம்..

உதிராத பூவும்..
மறையாத ஞாயிறும்..
தேயாத திங்களும்
எங்காவது இருந்தால்..

எனக்காக
ஒரு சொல் சொல்லிவிடு...
அவற்றைப் பார்த்து
அதுபோல மகிழ்வாக
வாழக் கற்றுக்கொள்கிறேன்.

_______________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

பார்வை..



Posted Image

நான் எழுதுகிற ஒவ்வொரு
எழுத்தையும் பார்ப்பதற்காக
நீ ஓடோடி வருகிறாய்...

உன்னைப் பார்ப்பதற்காகவே..
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..
உனக்கும் தெரியாமலே..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



நீளமான நேரங்கள்.




நீயூம் நானும் ஒன்றாகயிருந்தபோது...
பகல் பொழுது கூட
கண்ணிமைக்கும் தூரத்தில்..
கண் சிமிட்டிக்கொண்டிருந்தது...

இது இன்னும் நீளாதா என
ஏங்கும் ஒவ்வாரு பொழுதிலும்..
இருளும் வந்து
இரு புருவங்களின் இடைவெளியாய்..
இருந்து விட்டுச் சென்றது...

நீளும் பொழுதுக்காக..
நீயூம் நீங்காதிருக்க வேண்டி
நீண்ட தவம் புரிந்து
வரம் ஒன்று நான் வாங்கி வர..

கூடு விட்டுப் போன ஆவியாய்...
என்னை விட்டு சென்றாய் நீயூம் பாவியாய்..




கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image

வருவாயா





தேடும் விழிகளுக்கு..
காட்சியாய் நீ வருவாயா..
பாடும் பாடலுக்கு...
மொழியாய் நீ வருவாயா..

வளைந்து கொடுக்கும்
நாணலைப் போல்..
அங்கும் இங்கும் அலைந்து
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்..

அழுத விழிகளில்..
வழிந்தோடும் கண்ணீரில்..
வரிவரியாக உன் பெயரை..
உரக்கச்சொல்லுகிறது என் இதயம்..

இன்னும் ஏன் மெளனம்..
இதுவரை பொறுத்தது போதும்..
இரும்பல்ல என் இதயம்..
இருளுக்குப் பின் ஒளி என்றால்
அது உன் வருகையாக இருக்கட்டும்.

வருவாயா..

________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



பாவம் இவர்கள்..



ஏதோ ஒரு படம் தேட..
என் கண்ணில் பட்ட இந்தக் காட்சி..
கண்டதும் ஒரு கனம்..
நெகிழ்ந்தது நெஞ்சம்..


போர்த்துக்கொள்ள போர்வையின்றி..
உடுத்திக் கொள்ள ஆடையின்றி..
அள்ளி அணைக்க யாருமின்றி..
யாரோ விதைத்த விதை..
வீதியில் நாதியற்றுக் கிடக்கின்றதே..


நிஜமாக
பார்த்தால் பார்க்காமல் போகாதீர்கள்..
பராமரிக்கும் இடமிருந்தால்...
பக்குவமாய் அங்கே சேர்த்துவிடுங்கள்..

ஆலயங்கள் இனித்தேவையில்லை..
அதிகமாகவே இருக்கின்றது..
அனாதையாக அலையும்..
அபலைகளுக்கும், ஏழைகளுக்கும்..
கட்டிடுங்கள் பாதுகாப்பான இல்லம்.
______________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

அவனும் அவளும்..

(அவள்)
இங்க பாருங்க
நீங்க எத்தனை தடவை கேட்டாலும்..
எத்தனை மெயில்,
எத்தனை எஸ்எம்எஸ், இன்னும் எத்தனை எத்தனை
எத்தனை தடவை அனுப்பினாலும்..
என்னால உங்கள காதலிக்க முடியல்ல..

காதல் கேட்டு வாங்குவதில்ல...
மனசும் மனசும் ஒன்றுபட்டு
புரிந்து கொண்டு வரவேணும்..

(அவன்)
ப்ளீஸ்....சொல்லுறதைக்கேள்..
நீயில்லாத..
என்னுயிர்..இனி எதற்கு..
நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை..

(அவள்)
முதல்ல அதைச் செய்..

பயங்கர இசையின் முடிவின் பின்..
அவனும், அவளும்..
ஒருவரையொருவர் புன்னகைத்து..
இன்றைக்கு டப்பிங் இவ்வளவுதானாம்..
கூறியே விடைபெற்றுச் சென்றனர்.. smile.gif
_________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=15033

சில நிமிடங்களுக்கு முன்..



காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்.. sad.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"

நிஜமா அல்ல நிழலா..???


இது என்ன நிஜமா அல்ல நிழலா..
உயர உயரப் பறக்கும் பட்டம் போல..
இரு நூலில் ஆடும்
ஊஞ்சல் இங்கேயுமுண்டு...

கலகம் ஏதுமில்லை களிப்பூட்டும்..
தளமுண்டு..
நிஜமா இது நிழலா...?

வறியோரின் வாசலில்..
வசந்தமுமுண்டு..
நிழலா அல்ல நிஜமா...?

கோடிக்கணக்கில் துன்பமுண்டு..
ஆடித் தீர்திடலாம்...வா இங்கு...
நிஜமா இங்கு நிழலா..?

ஓலைக் குடிசையிலும்...
ஒற்றுமையாய் நாமுங்கு...
நிஜமா இது அல்ல நிழலா..?

வாழப்போகும் பைங்கிளிகள்..
ஆடித்திரிவது காண்கீர்..
நிஜமா அல்ல நிழலா...?

ஏழைக் குடிசையிலும்..அவர் தம் சோக கீதம்..
எட்டுத் திக்கு கேட்டினும்..
ஏன் என்று கேட்பாரின்றி வாழும் இந்த...
சமூகம் வாழ்வது நிஜமா அல்லது நிழலா.....?

செல்வக் குழந்தைகளின்
சிரிப்பில் ஆதவன் வந்தமர்ந்து..
ஆனந்தமாய் சிரிக்கின்றான்..

உரைத்திடுவீர் நீவீர்..
பாதியுகம் அழிந்திட்டாலும்..
பார் புகழும் சிறுவர்கள்..
நாமன்றோ......நிஜமா......அல்ல நிழலா...


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"


Posted Image

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14773

திங்கள், 26 ஏப்ரல், 2010

புத்திசாலி..



சில கால பழக்கம்தான்..
பல கால நண்பர் போல்
கலகலவென கதைப்பார்..

ஒரு நாள் கண்டோம்..
பஸ்சிற்காக காத்திருந்தார்..
வைத்திருந்த காருக்கு என்னாச்சு என்று கேட்டோம்..

பெற்றோல் விற்கிற விலையில
எதுக்கு வீண் செலவு அண்ணே என்றார்..
அதுவும் சரிதான்..வாங்கோ கொண்டே விடுகிறோம் என்றோம்..

இன்னுமொரு நாள்..

அவர் செல்போனுக்கு போன் எடுத்தோம்..
சேவையில் இல்லை என்றே சொன்னது..
வீட்டு நம்பருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது..

எதுக்கண்ணே வீண் செலவு..
ஒழுங்கான வேலையும் கிடைக்கல்ல என்றார்..
அடடா அதுவும் சரிதான் என்றோம்..

சில நாட்களின் பின்பு..

வீட்டிற்குச் சென்றோம்..
கணனியையும் காணவில்லை,
அழகான மீன் தொட்டியையும் காணவில்லை.

என்னாச்சு என்றோம்..
பிள்ளைகளால பெரிய தொல்லை...
அதனால விலைக்கு கொடுத்திட்டேன் என்றார்..

மெளனமாக சிரித்துக்கொண்டு இருந்தோம்..
ஆங்காங்கே கார்ட்போர்ட் பெட்டிகள்
இருக்கக் கண்டோம்..

அட எதுக்கப்பா இதெல்லாம்..?
வீ்ட்டுக்காரன் எழும்பச் சொல்லிட்டாண்ணா..
வேற வீடு பார்க்கிறேன் என்றார்..

அடப்பாவமே..
நாங்களும் கணனியில போட்டிருப்பாங்க.
வீடு பார்க்கிறோம் என்றோம்..

அமைதியாக
நித்தியானந்தா சுவாமி போல சிரித்தார்..
அப்புறம் என்ன சந்திப்போம் என்றோம்..

இருந்தா கண்டுக்குங்க..என்றார்..
அட என்னையா மனுசன் இவன்..
இப்படிச் சொல்லிட்டானே..என்று
என் கணவர் தத்துவ வரிகளில் ஆறுதல் சொன்னார்..

நம்பிக்கைதானே மனுஷ வாழ்வு
கைவிடாதீங்க நம்பிக்கையோடு வாழுங்க என்றார்..
அப்பவும் நித்தியானந்தா போல ஒரு தலையை சரித்து ஒரு சிரிப்பு..

சில நாட்கள் கழித்து..

நல்ல தொரு வீடு கிடைச்சிருக்கு
என்று சொல்ல தொலைபேசி எடுத்தபோது..
யாரும் பதில் இல்லை..அடப்பாவமே

அவர் குழந்தைகளுக்குத்தான் ஏதும் சுகயீனமோ..
பதறியபடி வீடுதேடிச் சென்றபோது..
வீட்டுச் சொந்தக்காரன் சொன்னான்..

வாடகைப்பணமும் தராமல்
ஆள் எஸ்கேப் என்று..
ஐயோ அப்போ நாங்க கொடுத்த பணம்..???


(இது வெறும் கற்பனையல்ல முற்றிலும் உண்மை! உண்மை! உண்மை!!)
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14666

ஏனிந்தக் கொடுமை...?



பாவம் இந்தக் குருவிகள்..
பகலிரவாக காத்துவந்தன தம் குஞ்சுகளை..
பகலவன் வரும் நேரம் பறந்து பறந்து..
பசிக்கு உணவு தேடி களைத்து வந்து இளைப்பாறும் மரங்களை..
ஊருக்கு இடைஞ்சலென..
ஊரார் சேர்ந்து ஒட்ட வெட்ட..
ஊசிற்தூற்றல் ஒருபுறம் பெய்ய..
ஊமையாய் கதறிக் கதறி குருவிகள்..அழுதன

இத்தனை நாள் நிழலுக்காக
ஒதுங்கிய மக்கள் மறந்தன நன்றி..
இதுநாள் வரை முதியோரின் சங்கமாகயிருந்த
அந்த மரம் சரிந்து தரையிலே விழுந்தன...
அங்கே குஞ்சுகளும் அதற்குள் நசுங்கிப் போயின..
அந்நிலை கண்டு என் மனம் கலங்கின..

இந்த மரம் இல்லையென்றால் நாம்
இதுபோல் இன்னுமொரு மரத்தை நாடிச்சென்றிடலாம்..
இத்தனை நாட்கள் அடைகாத்து குஞ்சுகளைக் கண்ட..
இச்சிறிய பறவைகளின் நிலையை எண்ணி மனம் அழுகின்றது..

காதல் வே(வி)ஷம்.


அடிப்பாவி..
என் கல்லறைக்கு
கண்ணீர் பூக்களால்
அலங்காரம் செய்கின்றாயே இப்பொழுது..

அப்பொழுதே எம் காதலுக்கு...
மலர்களால் மாலை சூடியிருந்தால்..
காதல் பூக்களால் காலமெல்லாம் வாழ்ந்திருப்போம்..
கண்கெட்ட பின்பே சூரிய நமஸ்காரம் எதுக்கடி..?


மனதை சிதைக்கத் தெரிந்த மாதுவே...
இந்த மலர்களையாவது மரத்தோடு விட்டுவிடு...
மலரஞ்சலி எதுவும் வேண்டாம்..அவைகளைாவது
ஒரு நாளாவது உயிருடன் வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14414

நீயே தெய்வம்.



இருட்டு வாழ்வில்..
வெளிச்சமாய் வாழ்ந்தேன்..
தாயின் கருவறையில்..

(வெளி) வெளிச்சத்திற்கு வந்தும்..
சில குருட்டு ஜனங்களின்..
இருட்டு மனங்களைப் பார்த்து..
மனம் அழுது வடிக்கின்றது..

தாயே உன் கருவறை போல்..
பாதுகாப்பான அறையேதுமில்லை..
பாரினில் உன் போன்ற தெய்வம் வேறெதுவுமில்லை.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

புதன், 24 மார்ச், 2010

நினைவோ ஒரு பறவை



தொலை தூரத் தேசமொன்றில்
நீயிருந்த போது..
தொலைத்திருந்தேன் தனிமையில்
நானும் இன்பமான நாட்களை..

அருகில் இருந்து ஆரத் தழுவி..
இமை வருடி
இமைக்காமல் நீ பார்த்திருக்கும்
அழகையெல்லாம் நினைத்தபடி..

இரவிரவாக கடிதம் எழுதி..
இல்லை இல்லை அது கடிதம் என்று நீ
ஒரு போதும் சொன்னதுமில்லை..
என் உணர்வின் வலிகளை விழிகள் சுமந்தபடி..

மழை நீர் வந்து அழியும் கோலமாய்..
ஒவ்வொரு காகிதத்தின் எழுத்துக்களை
கண்ணீரால் நனைத்து..
உன் கரம் வந்தடையும் எனது காதல் கடிதங்கள்..

பதிலுக்கு பாடல் வரிகளோடு முத்தங்கள் சுமந்து வரும் உன்
மடலை கண்ணீரோடு பலதடவை வாசித்து..
கடலில் அழும் மீனாக யாருக்குமே தெரியாமல்..
என் மடல் வீங்க உறங்கிடுவேன் நெஞ்சோடு அணைத்தபடி..


பத்திரமாய் அத்தனையும் நீ எடுத்து வந்து..
என் முன்னிலையில் வாசித்த போது..
மார்கழியில் பழுத்து வெடித்துச் சிதறிய மாதுளை முத்துக்கள் போல்..
வெட்கத்தால் அகம் மலர முகம் பொத்தி சிவந்திருந்தேன்..


பதிலுக்கு நானும் ஒரு மூட்டையாக சேர்த்து வைத்திருந்த
உன் அன்புக் காதல் கடிதங்களை உனக்கு முன்னால் வாசிக்க
அதை நீ எட்டி எட்டிப் பறிக்க வர..


நான் கடிதத்தையும் கொண்டு ஓடிப்போக..
சிரித்துச் சிரித்து மகிழ்ந்த அந்தப் பொன்னான நினைவுகள் போல்..
இனிக்கவில்லை மின்னஞ்சலில் வரும் உன் கடிதங்கள்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

உன் நினைவு


உன் நினைவில்
விலகாத நினைவாய் நான்.
உன் இதயம் என்றால்..

அது பொய்தானே..

உன் இதயம் விட்டு விட்டு
துடிக்கிறதே..
எவ்வாறு விடாமல் விலகாமல்..
என் நினைவு..?
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நீளமான நேரங்கள்..



நீயூம் நானும் ஒன்றாகயிருந்தபோது...
பகல் பொழுது கூட
கண்ணிமைக்கும் தூரத்தில்..
கண் சிமிட்டிக்கொண்டிருந்தது...

இது இன்னும் நீளாதா என
ஏங்கும் ஒவ்வாரு பொழுதிலும்..
இருளும் வந்து
இரு புருவங்களின் இடைவெளியாய்..
இருந்து விட்டுச் சென்றது...

நீளும் பொழுதுக்காக..
நீயூம் நீங்காதிருக்க வேண்டி
நீண்ட தவம் புரிந்து
வரம் ஒன்று நான் வாங்கி வர..

கூடு விட்டுப் போன ஆவியாய்...
என்னை விட்டு சென்றாய் நீயூம் பாவியாய்..
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

புதன், 24 பிப்ரவரி, 2010

எங்கே முறையிடுவது..?




எங்கே நான் முறையிடுவது..?
அங்கே என்னை அழைத்துச்செல்லுங்கள்..
இங்கே நடக்கும் கொடுமைகளை
எங்கே நான் சென்று முறையிடுவது..?

சுடும் மணலில் அழும் குழந்தை
படும் வேதனையைப் பார்த்தும் பார்க்காதுமாய்..
குடம் நிறையப் பாலுடன்..
அன்புடன் அமுது படைக்கின்றனராம் ஆண்டவனுக்கு..

நூலில் கற்றது கல்வியறிவு..
தாய் கொடுத்தது மானிட உயிர் விருது..
சேய் செய்யும் கடமைதனை மறந்து..
பொய்யாக ஒரு குற்றம் சுமத்தி..
தாய்,தந்தையர் போகின்றார் தனியிடமாம் முதியோர் இல்லமதுவாம்..

எங்கே போய் நான் முறையிடுவேன்..?

ஊருக்கு ஒரு ஆலயம் இருந்தால்
உனக்கென்ன லாபம்
தனக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டு..
வீதிக்கொரு ஆலயமாக
அவனவன் தேடுகிறான்..லாபம்..


பிழைக்கத் தெரிந்த புத்தி ஜீவிகளுக்கு...
புரியும் படி பாடம் புகட்ட...
எங்கே நான் போய் முறையிடுவேன்..?

பசிக்கு சோறு வேண்டாம்..
படிப்பிற்கு வழிகாட்டென்று..
பாதையோரத்தில் கையை ஏந்தும்..
சிறுவர்களுக்காக ஆலயம் வேண்டாம்..

அறிவை வளர்க்க ஆசானுடன் பாடம் நடத்திட
அமைதியான பாடசாலை ஒன்றை அமைத்திட..
திடம் கொண்ட நல்லவுள்ளங்கள்..
இருக்கும் இடம் கண்டு..
உடன் கூட்டி வர எங்கே நான் போய்முறையிடுவேன்.

நன்மை என தீமை விதைக்கின்றான்..
உண்மையென பொய்யை உரைக்கின்றான்..
வெள்ளை உடையில்..அழுக்கு மனதோடு..
சொல்லில் தேனை வைக்கின்றான்...
உள்ளத்தில் வேம்பாய் கசக்கின்றான்.

எங்கே நான் போய் முறையிடுவேன்...?

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 22 ஜனவரி, 2010

கண்களால் கைது செய்தாள்..


எப்படித் தெரியும் உனக்கு..
உன் இதயத்தை
திருடியவன் நானென்று..

உன்னைப் பார்க்கையில்..
என்னைக் கைது செய்து விட்டாயே..
கண்களால் கைது செய்துவிட்டாயே..

வியாழன், 31 டிசம்பர், 2009

ஆண்டு 2010 வருக!! தருக!!




எண்ணற்ற துயரமதில்
எம்மவர் உட்பட
எண்ணிலடங்கா மானிடர்கள்..
ஏன் பிறந்தோம் என வேதனைப்பட..

பட்டதெல்லாம் போதும்..போதும்..என
பகலவன் ஒளி போலே
அவனவன் வாழ்வும்..
அமைய வேண்டி
ஆண்டே இரண்டாயிரத்துப்பத்தே வணங்குகின்றேன்..


இன்றைய இளைஞர்களின்
இரும்புக்கரங்களில்
நன்றே செயலாற்றும் வல்லமை
கிடைத்திட இறைவனருள் துணைபுரியவேண்டும்..

வென்றே தீருவோம் என
நன்றே செயல்படும்
நானிலங்களிலும் நல்லவுள்ளங்களின்..
நன்மையில் கண்ணே கருத்தாகயிருக்க..
ஆண்டே இரண்டாயிரத்துப் பத்தே வருக! தருக!!

அக்கினிப் பிழம்புகள்
அகிலத்தை அழிக்காதிருக்க..
அணு ஆயுதங்கள் அவதரிக்கலாகாதவாறு..
அமைதி பேண வேண்டும்..

இனம், மொழி, நாடு வேறாயினும்..
இயன்வரை அன்பு ஒன்றால்..
இவ்வையகமே இன்புற்றிருக்க..
இரண்டாயிரத்துப் பத்தே நலமுடன் வருக! வருக!!




திங்கள், 28 டிசம்பர், 2009

சில நிமிடங்களுக்கு முன்


காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்..

திங்கள், 21 டிசம்பர், 2009

யாரோ அவர் யாரோ..



ஆண்டு பத்து முடித்தபிறகு..
எனை ஆளப்போகும்
மன்னன்தான் யாரோ என்றறிய..

ஆலய வாசலிலே
அமர்ந்திருந்த
கிளி ஜோசியரை நாடினேன்..

ஒன்றன்பின் ஒவ்வொன்றாக
எடுத்துப்போட்டுக்கொண்டேயிருந்த கிளியிடம்..
சீக்கிரம் எடேன் கிளி என்றேன்..

ஆஹா....கூறியது புரிந்துவிட்டதோ என்னவோ...
என்னதான் அதில் என்று என் மனம் ஆவலாகயிருக்க...
வந்த படம் குதிரையில் ஓர் அரசன்..

மங்கையிவள் மனதாள..
மன்னன் அவன் வருவான் மணமுடிக்க..
சீர் கொண்டு வருவான் சிங்காரத்தேரிலவன்..

அடடா அன்றிரவு முழுக்க எனக்கேது நித்திரை..?
சித்திரையில் வருவானோ..
சிங்காரவேலனாக வருவானோ..

எப்பொழுது வருவான்..
எப்படி வருவான்..? எத்திசையிலிருந்து வருவான்..
எண்ணி எண்ணியே விடிந்தது பொழுது..

சாஸ்திரம் பார்க்கலையோ கை சாஸ்திரம்..
யாரோ ஒரு அக்கா
கையில் ஒரு புல்லாங்குழலோடு உரத்த குரலில் சொல்ல..

ஆஹா...கிளி சொன்னது சரியா எனக் கேட்டுப்பார்ப்போம்..
கல்வி என்றா, செல்வம் என்றா, ஆயுள் என்றா அப்புறம் என்றா..
அட அதை எல்லாம் விட்டிட்டு என்னை கட்டிக்க யாரு வருவான் அத சொல் என்றேன்..

வடக்கிலிருந்து வருவான்..
வக்கீலாக வருவான்..
வள்ளலாகயிருப்பான், வல்லவனாகவும் இருப்பான் என்றா..

அப்போ கிளி சொன்னது.....???

அன்றிரவும் கெட்டது தூக்கம்..

அம்மாவிடம் பத்திரமாகயிருக்கும்
எனது குறிப்பைக் கேட்டேன்..
எதுக்கோ...? கேள்வியோடு ஒரு பார்வை..

படிச்சு என்னவாகப் போறேன் என்று..
இந்த கொப்பியில இருக்காமே நண்பி சொன்னாள்..
சரி இந்தா கவனமாகத் திருப்பி தா..

ஆஹா....அவ்வளவு நம்பிக்கை என்மீது..
மணவறையில் மாலையிட வரும் மன்னன்தான் யாரோ..?
ஒரு வரிவிடாமல் பக்குவமாய் தேடியது கண்கள்..

பெற்றோர் பார்க்கும் வரன் அமையும்..
உறவினர்களுக்குள் பொருத்தம் உண்டாம்..
திருமண வயது தள்ளிப்போகும்...


ஆஹா....இவர் எழுதியது தான் உண்மையானதோ..
பேர் பெற்றவராச்சே தவறாகக் கணிக்க மாட்டார்..
கனவுகளோடு மிதந்த காலம்..

திடீரென ஆஜரானார்...
கண்களால் மோதிக்கொண்டார்..
அப்பொழுது குடியேறிவிட்டார் இதயத்தில்..

கிளி சொன்னதும்..பொய்.
குறத்தி சொன்னதும்..பொய்..
கிரகங்களைக் கணிச்சு முற்கூட்டியே எழுதிய சாஸ்திரமும் பொய்யாகிவிட்டதே..

எது எது எப்போது நடக்குமோ..
அது அது அப்போது நடக்கும்..
அதுதான் யதார்த்தம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12294
போட்டோ: அரவிந்தன்(கூகிள் நெட்)

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..2

முன்னால் காதலனே
கண்முன்னால் கண்ட உன் மடல்..
கண்டு இதயம் டைப்படிக்க
என் விரல்களும் டைப்படிக்கிறது..

நல்ல செய்தி ஒன்று கூறினாய்..
நீ தண்டனை பெறுவதாக..
ஆஹா....அதற்காக நான் செய்த
பிரார்த்தனைகள் வீண் போகவில்லை...

சித்திரகுப்தாவிற்கு பதிவிலிடுகிறேன்..
சித்திரவதைகளைக் கூட்டி
சிறையிலிடும்படி..
சிந்தனை செய்யாதே..தப்பிக்கலாம் என்று..

பெண் என்றால் பேயும் இரங்குமாம்..
பேய் என்றால் நானும் இரங்குவேன்..ஆனால்..
நீயோ...பேயுமில்லை பிசாசுமில்லை..
துரோகி...மன்னிக்கவே முடியாத பாவி நீ..

நிலவு போல நீ வந்தால்..
வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டிருப்பேன்..
வெளிச்சம் போல வேஷம் போட்டாய்..
விழுந்து நானும் எரிந்தது போதும்..நோ எக்ஸ்கியூஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234&pid=152316&mode=threaded&start=#entry152316

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..




அன்பே நலமா..
சொர்க்கத்திற்கு வந்த நான்..
உனக்குச் செய்த துரோகத்தால்
நரகத்திற்கு தள்ளப்படும் நிலையில் தவிக்கிறேன்...

நரக வேதனைகளுக்குப் போகும் முன்..
நான் உனக்கு அனுப்புகிறேன் ஓர் மின்னஞ்சல்..
நடந்ததெல்லாம் மறந்து இதை ஏற்றுவிடு..

என்ன இடையூர்கள் வந்தாலும்..
என்னவள் நீயன்றோ வேறொருத்தியுமில்லை
என்றுனக்குச் சொல்லிவிட்டு..

அன்றவன் தந்த ஐடியா கேட்டு..
அநியாயமாக உன்னைக் கைவிட்டுவிட்டேன்..
அதுமட்டுமா என் கண்ணே..

பொல்லாத பெண் ஆசையில்..
இல்லாததெல்லாம் சொல்லியுன்னை..
இழிவு படுத்திவிட்டேன்..

பொல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
கல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
புழுவால் என்னை குளிப்பாட்டி எடுக்கிறார்களே..

எங்கே நான் போய்ச்சொல்ல..
என்னவளே எனக்காக இரங்கி ஒரு மெயிலிடு..
எமன் அண்ணா யோசித்து தண்டனைகளை குறைத்துவிடுவார்.

அடுத்த மின்னஞ்சல் வருமுன்..
ஆருயிரே மன்னித்து மனமிரங்க மாட்டாயா..
மறு பிறப்பு ஒன்றிருந்தால் மனம் வந்து மணமுடிப்பேன் உன்னையன்றோ.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234(பதில் போகும்..)

புதன், 25 நவம்பர், 2009

மீளாத சோகம்..


மீளாத சோகம்..எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே..

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே..

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே..

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே..

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்..