வியாழன், 5 நவம்பர், 2009

ஒத்தையடி பாதையிலே..

Get this widget | Track details | eSnips Social DNA

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வஞ்சக வலையில்..


மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு

அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..

ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...

அவனுக்கென்ன..

மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..

அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..

அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து

அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..

(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

படத்தில்..


வீடெல்லாம் ஒப்பாரி..
பாட்டி இறந்து விட்டார்....
அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11190

விதவை



தான் விதவை என்று தெரிந்தும்..
அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்..
என் அக்காவிற்கு....

நிஜம்


நானும் அண்ணாவும்
சண்டைபோடுகின்றோம்..
அப்பா சிரித்துக்கொண்டிருக்கிறார் புகைப்படத்தில்..

உயிர் காதலர்கள்...

Etnies

Click Here For Images &
Etnies Pictures

இணை பிரியாத
உயிர் காதலர்கள்...
ஒரு ஜோடி பாதணிகள்..

நற் செய்தி



நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..

ஆன்மாவின் சிந்தனையில்..



ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்..
என் தாயின் தலாட்டு..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11179

அவலம்..


ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************

வாழ்ந்து பாரு...



ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..

உன்னை நீ முதலில்
உணர்ந்து கொள்ளு..
பிறருக்கு..
உண்மையாக நடந்து கொள்ளு.

நாளைய நாளில்
நம்பிக்கை கொள்ளு..
நான் நான் என்ற அகங்காரத்தை
விட்டுத் தள்ளு.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11094

தீபாவளி..



பட்டாசு கொளுத்தி..கோலாகலமாக
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டது..
தெருக்கலெல்லாம் அலங்கோலமாக காட்சி தந்தபடி..


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11239

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பாடமறந்த பூங்குயில்..



திருமணம் என்னும் பந்தத்தில்..
உருவான பெண்ணே..
உருகும் உன் மனநிலை கண்டு
கலங்குகின்றேன் நானே..


மாலையிட்ட சொந்தம்
காலங்கள் செல்லச்செல்ல..
வேதனையும், சோதனையும் தந்து..
உன்னை வாட்டி வதைப்பதை
நினைத்து கலங்கிநிற்கின்றேன்..

பண்பாக நடந்து கொண்டால்..
அன்பாக எடுத்துச் சொல்லலாம்..
பிரச்சனை என்று வந்தால்
பேசித் தீர்த்து வைக்கலாம்.

பிரச்சனையே அவரானால்..?
எதையும் தாங்கும் இதயம்
உனக்கு வேண்டும்..

ஆணவம் தலைக்கேறி
அடாவடித்தனம் செய்யும் போது
யார் சொல்லி என்ன பலன்..?

பிரிவு என்ற சொல்லுக்கு
இலகுவில் பாலம் அமைத்துவிடலாம்..
அமைத்த பாலத்தில் வாழ்க்கைப் பாதையை
சிறப்பாக அமைக்கலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே..

காற்றடித்து மூங்கில் முறிந்துபோவதில்லை..
கூட்டுக்குள் வாழும் கிளி ஊமையாய் வாழ்ந்ததில்லை..
அலைகள் அடிப்பதால் மீன்கள் கரைவந்து சேர்வதில்லை..
இருண்ட பொழுதும் புலராமல் போனதில்லை..

நேற்று வரைக்கும் இரவினில் நீ
தலையணையை நனைத்தது போதும்..
அழுவதால் தொடரும் துயர் தீரப்போவதில்லை..
பரந்தவானில் அன்புள்ளங்கள் நிறையவுண்டு..
மனம் தளராமல் அதைப்புரிந்து வாழப்பழகிக்கொள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

உள்ளத்தில் கலந்த உறவே..‏



பழகிய நாட்கள்..
பசுமையான நினைவுகள்..
பல ஆண்டுகளாக
நினைக்க மட்டும்தான்
என்றே என் மனம் ஏங்க..

அதிகாலைப்பொழுதினில்..
காலைத் தென்றலாய் நீ
காற்றலையில் கடமையாற்ற

தூரத்து மல்லிகையின்
மணம் காற்றோடு கலந்து
உள்மூச்சில் விழுந்தது போல்..

நீங்கதானே..என்று
என்னை இனங் கண்டு கொண்ட
அன்புள்ள கிருஷ்ணா..

ஆண்டுகள் பல கடந்தபின்பும்..
ஆடிப்பாடித் திரிந்த கதைகள் நீ சொல்ல..
அதை இடைநிறுத்தி அதன் தொடர் நான் சொல்ல..
நீயூம் நானும் பின்னோக்கி அந்தப் பருவத்திற்குச் செல்ல..

ஒரு நாள் நீடிக்காத
சின்னச் சின்ன கோபங்கள்..
பொய்யான பந்தையங்கள்...
களவாய்ப் பிடுங்கும் மாங்காய்கள்

பார்த்த படங்கள்...

ம்....இதுவரை
யாருமே பார்க்காத பக்கங்கள்..

ஓ..அத்தனையும்
நினைத்துப் பார்க்கிறேன்..
மலரில் விழுந்த மழைத்துளியாய்..
என் கண்ணில் முத்தாய் கண்ணீர்த் துளிகள்..

பலவர்ண நிறங்களில் தினம்
பூத்து மணம் பரப்பும் பூக்களாய்

எனது சகோதரர்களும்..
உனது சகோதரர்களும்..
ஒன்றாகச் சேர்ந்து..
முற்றத்தில் பூத்துக்
கைகோர்த்து திரிந்த நாட்களை
அந்த முற்றம் கூட மறந்து விடாது..

போகிற திசை தெரியாமல்..
ஓடுகின்ற அருவி போல்..
நேரம் போவது தெரியாமல்
நெடு நேரம் பேசிக்கொண்டேயிருக்கிறோம்..

ஓடிக்கொண்டு இருக்கும் கடிகாரம்..
அடித்துக்கொண்டிருக்கும் இசைபோல்..
ஓயாது என் நினைவில் உன் எண்ணம்..

சரியாக இடப்பட்ட முகவரி
காலம் கடந்தாலும்..
கை வந்து சேருவது போல்..
உண்மை அன்பை நெஞ்சார நேசித்த
எங்கள் உறவு பல ஆண்டுகள் கடந்த பின்பு
காற்றலை சேர்த்து வைத்து விட்டது..

என் சகோதரிகள் சார்பாக
உன்னைக் கேட்கிறேன்..
எங்காவது போவதாகயிருந்தால்
சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்..

உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்..
உன்னைக் காணவில்லையே என்று
ஏங்கிய இதயத்தின் வலியை
மீண்டும் உருவாக்கிவிடாதே..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11045

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சுகமான நினைவுகள்..

வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வண்ணனின் உண்மை வரிகள்..

Glitter Graphics


அருமை என்பது,
யாழ்ப்பாண ஒடியல் கூழ்
பெருமை என்பது,
என் தாயிற்கு மகனாகப் பிறந்தது

சிறுமை என்பது,
நான் டுபாயில் வாழ்வது
வறுமை என்பது,
நான் பாசத்திற்காக ஏங்கியது

கொடுமை என்பது,
வன்னியில் மனிதர்களை நிர்வாணத்துடன் வைத்து சுட்டது
கடுமை என்பது,
எனது உழைப்பு

இனிமை என்பது,
உங்கள் தமிழை படிப்பது.

வண்ணனின் உண்மை வரிகள்..
(எனது முகவரிக்கு அஞ்சலிடப்பட்ட தம்பி அபிவண்ணனின் வரிகள்)



திங்கள், 28 செப்டம்பர், 2009

வாழ்வு உன் கையில்.


மரம் நிலைக்க
அதன் வேர் காரணம்..
அதுவே நீடுழி வாழ..
நல்ல வளமான மண் காரணம்..

நீ வாழ..
பெற்றோர்கள் காரணம்..
உன் வாழ்வு செழுமை பெற..
உன் மனம் தான் காரணம்..

நல்லதையே நினை..
நன்மையே செய்..
உள்ளத்தால் உண்மையாய் நட..

உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்..
உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை..
உன் வாழ்வு உன் கையில்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11002

வழி(லி)


முட்டி முட்டி தலைமுழுக்க வலி..
வழி தேடி தவிக்கும்..
தொட்டி மீன்கள்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10989

வேண்டுதல்..


எந்தச் சாமிக்கு வேண்டுதலோ..
இலைகளை மட்டும் உதிர்கின்றனவே
மரங்கள்..(AUTUMN)

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

வெளிச்சம்..



எந்தச் சந்தர்ப்பத்திலும்..
ஏழைக்கென்ன கவலை
இலவசமாய் நிலா வெளிச்சம்..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

ஐயோ பாவம்..


ஏழையின் சிரிப்பில்..
இத்தனை அடிகளா..
காந்தியின் முத்திரை..

_______________________
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 14 செப்டம்பர், 2009

பெண்ணே நீயும் பெண்ணா..


சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************

தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..

*************************************

பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ...

--------------------
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951

சுமைகள்..



பரந்த மனசு..அதனால்தானோ..
பலபேருடைய கோரிக்கைகளையும்..
நீ சுமக்கின்றாய்..

**************************************

நீயும் தாய் தான்..
தினம் சுமக்கிறாய்..
கடிதங்களாக..

**************************************
யார் செய்த சாபமோ..
நீ மட்டும் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறாய்..

***********************************

பாவம் நீ..
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறாய்..
வாயிருந்தும் ஊமை என்றபடியாலோ...

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10948

சந்தோசம்..

Glitter Graphics

மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10916

புதன், 9 செப்டம்பர், 2009

சந்தோசம்..



மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நவீன சங்கம்..



நிலவுப்பொழுதில்..
நீயும் நானும் மற்றும்
சுற்றத்தாரும், மற்றவரும்..

வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து
ஒரு இடமாகச் சந்தித்து
கூடிப் பொழுதைப்போக்க..

சங்கம் வளர்த்த
அந்தப்பெரிய மரம் தந்த நிழல்..
இன்று அனாதையாக அது இருக்க..

இன்று அவரவர்..
தத்தம் வீடுகளிலிருந்து..
உலகெங்கும் உறவாட வைக்கும்..
நவீன சங்கம் வளர்க்கும் கணனியாம்
.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நீயும் அழகுதான்..

Glitter Graphics

அன்றொரு பருவத்தில்

அழும் குழந்தையாய் நானிருக்க..

அன்போடு அம்மா கூறிய வார்த்தைகள்..


அதோ பார்..

இருண்ட வானில் மிளிரும்

அழகழகான நட்சத்திரங்கள்..



ஓ..

எண்ணவே முடியல்லையே..

எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்..

ஆமா..எப்படி..?

ம்....

இங்கு இறந்தவர்கள்

அங்குதான் ஜொலிக்கிறார்கள்..வெள்ளியாக..


இப்போது அமைதியாகப் பார்க்கிறேன்..

நீகூட அழகாகத்தான்....இருக்கிறாய்..

என் அம்மாவும் கூடவே அங்கேயிருப்பதால்
.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10878&st=0#entry146287

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

என்னில் நீயே..‏

Glitter Graphics

என் காதலே..என்னில் காதலா..
எத்தனை நாள் உன் நினைவுகளால்..
என் தூக்கத்தை தொலைத்திருப்பேன்..

பார்த்திருக்கும் போது நீ வராமலே போகிறாய்..
பாதி உறக்கத்தில் எனை மறக்க மெல்ல வந்து
காதல் கதை பேசுகிறாய்..

இனிமையான கனவுகூட
முற்றும் காணாத நிலையில்
உன்னால் தடங்களான
என் வருத்தங்கள் உனக்கெங்கே புரியப்போகிறது...

என் மீது நீ கொண்ட காதல்...
அதனால் நான் கொண்டேன் தொல்லை..
தூக்கம் கெட்டு நிலவு வரும் நேரமெல்லாம்
விடாமல் துரத்திக்கொண்டு வரும் உன் நினைவு..
என்னில் நீயே என்பதால்..
நச் என்று என் கையால் தந்தேன்..

தொலைந்தாய் நீயும்..கொசுவே..
தொடருகிறேன் நானும் என்..
இனிமையான தூக்கத்தை.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10257